சனி, 28 ஆகஸ்ட், 2010

தேன்கூடு

நீ "சக்கரைகட்டி" என
நினைத்து
கரைக்க முயன்று...,
நேற்றெல்லாம்
பெய்த மழை
கடைசியில்
ஒப்புக்கொண்டது...
நீ சக்கரைகட்டி அல்ல...
"தேன்கூடு"...என்று..?!

புதன், 11 ஆகஸ்ட், 2010

நட்பு

கண்டங்கள் கடந்து விட்டாலும்
நெஞ்சில் கனன்றுக் கொணடிருக்கும்
உறவு அந்த உறவு

காலங்கள் கடந்து விட்டாலும்
கடல் அலையாய்
மீண்டும் மீண்டும்
இதயத்தை நனைக்கும் உறவு
அந்த உறவு

அன்னையிடமும்
அருமை மனைவியிடமும்
பகிர முடியாத
அந்தரங்கங்களை எல்லாம்
பகிர்ந்துக் கொள்ளும்
அற்புத உறவு அந்த உறவு

சோகங்களையும்
தாகங்களையும்
பகிர்ந்துக் கொள்ளும்
சத்தான உறவு அந்த உறவு

உள்ளத்திலும் உதட்டிலும்
ஒருமித்திருக்கும்
உறவு அந்த உறவு
இதற்கு தாய் வழியும் இல்லை
தந்தை வழியும் இல்லை

அது ஒரு சோகங்களை
இறக்கி வைக்கும்
சுமைதாங்கி

அது ஒரு மகிழ்சியை
பகிர்ந்து கொள்ளும்
பள்ளிக் கூடம்

அது ஒரு
பட்டாம் பூச்சியாய்
பறந்து மகிழ்ந்த
மலர் வனம்

அது ஒரு
மாறத மணம் விசும்
நந்தவனம்

சொற்களால் வடிக்க
அது கம்பர் கால காவியம் இல்லை
கற்களில் வடிக்க அது
சோழர் கால கற்சிலையும் இல்லை

நதியோரத்து
தென்றலின் சுகம் அது
கோடை மழையின்
சாரலின் சுகம் அது

உள்ளத்தால் மட்டுமே
உணர்ந்து கொள்ளும்
அற்புத உணர்வு அது

இந்த உறவுக்கு மட்டும்
என்னவோ தெரியவில்லை
வயசாவதே இல்லை

இது ஒரு
ஒளிர்ந்து மறையும்
மத்தாப்பூ அல்ல

இது ஒரு
பூத்து உதிரும்
உதிரிப் பூவும் அல்ல

உதிரும் பூக்கள்
உள்ள உலகில்
உதிரா பூ

இந்த நட்பு
சில நேரங்களில்
சில மனிதர்களிடம்
ஒரு முறை மட்டுமே
பூக்கும் அதிசய பூ
இந்த நட்பு...
உங்களை அன்புடன் வரவேற்பது மதுக்கூர் செந்தில்....